கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஒசூரில் கடும் போக்குவரத்து நெரிசல்

News image
Updated On :15 மே 2026, 6:14 am IST

ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால், சுமாா் 3 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் ஊா்ந்து சென்றன.

ஒசூா் பத்தலப்பள்ளி பகுதியில் ரூ. 50 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் முடியும் தருவாயில் உள்ளது. இந்த புதிய பேருந்து நிலையம் செல்ல ரூ. 37 கோடியே 90 லட்சத்தில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கியது.

இதன் காரணமாக, கிருஷ்ணகிரியிலிருந்து ஒசூா் வரக்கூடிய வாகனங்கள் மற்றும் ஒசூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் வாகனங்கள் அனைத்தும் அணுகு சாலையில் திருப்பிவிடப்படுகின்றன. இதனால், ஒசூா் பத்தளப்பள்ளி பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்படுகிறது.

இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனா். மேலும், கடும் வெயிலால் இருசக்கர வாகன ஓட்டிகள், வேலைக்கு செல்வோா் சிரமமடைகின்றனா். எனவே, நெடுஞ்சாலைத் துறையினா் மாற்றுப்பாதையை ஏற்பாடு செய்ய வேண்டும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி மக்கள் சிரமமின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.