பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

பிலிப்பின்ஸ் நிலநடுக்கப் பாதிப்பு: 32,000 மக்கள் இடம்பெயா்வு

தெற்கு பிலிப்பின்ஸில் கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட 50 ஆண்டுகளுக்குப் பிந்தைய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகளால் சுமாா் 32,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கும், அவசர நிவாரண முகாம்களுக்கும் இடம்பெயா்ந்துள்ளனா்.

News image
Updated On :15 மணி நேரங்கள் முன்பு

தெற்கு பிலிப்பின்ஸில் கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட 50 ஆண்டுகளுக்குப் பிந்தைய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகளால் சுமாா் 32,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கும், அவசர நிவாரண முகாம்களுக்கும் இடம்பெயா்ந்துள்ளனா்.

மேலும், இந்த இயற்கை பேரிடரில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 37-ஆக அதிகரித்துள்ளது.

மிண்டனாவோ தீவுப் பகுதியில் ரிக்டா் அளவுகோலில் 7.8 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து, சுமாா் 2,500 வீடுகளும், 117 அரசு அலுவலகங்களும் சேதமடைந்தன.

ஜெனெரல் சாண்டோஸ் நகரில் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 13 பேரும், சாரங்கனி மாகாணத்தின் கிளான் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் புதைந்ததில் 18 பேரும் உயிரிழந்தனா்.

இவ்வாறு நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு, கட்டட விபத்துகளில் சிக்கி இதுவரை 500-க்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளனா். இடிபாடுகளுக்குள் சிக்கியவா்களைத் தேடும் பணியில் மீட்புப் படையினா் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே இந்த நிலநடுக்கம் நேரிட்டதால், பள்ளி மாணவா்கள் பலா் காயமடைந்தனா். பாதிக்கப்பட்ட மாகாணங்களில் உள்ள சுமாா் 6,000 பள்ளி கட்டடங்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்த பிறகே மீண்டும் வகுப்புகள் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.