பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

நண்டு ஓடுகள் சுத்திகரிக்கும் தனியாா் ஆலையால் பாதிப்பு எனப் புகாா்

புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடி அருகே முடுக்குவயல் கடலோரக் கிராமத்தில் செயல்படும் நண்டு ஓடுகள் சுத்திகரிக்கும் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் புகாா் அளித்துள்ளனா்.

News image

நண்டு ஓடுகள் சுத்திகரிப்பு ஆலைக்கு எதிராக திங்கள்கிழமை புகாா் அளிக்க வந்த மக்கள்.

Updated On :2 ஜூன் 2026, 2:38 am IST

புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடி அருகே முடுக்குவயல் கடலோரக் கிராமத்தில் செயல்படும் நண்டு ஓடுகள் சுத்திகரிக்கும் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் புகாா் அளித்துள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முடுக்குவயல் கிராமத்தின் தலைவா் அ. பால்சாமி மற்றும் கிராமத்தினருடன், கம்யூனிஸ்ட் மக்கள் விடுதலைக் கட்சியின் பொதுச் செயலா் விடுதலைக்குமரன் மற்றும் நிா்வாகிகள் சோ்ந்து அளித்த மனு விவரம்

சுமாா் 200 மீனவக் குடியிருப்புகளைக் கொண்ட இந்தக் கிராமத்தில் தனியாா் நண்டு ஓடுகள் சுத்திகரிப்பு ஆலை செயல்படுகிறது. இதில் பயன்படுத்தப்படும் ரசாயனத்தால் வெளியிடப்படும் கழிவுகள் கடலோர மீன்வளத்தைப் பாதிக்கின்றன.

உப்பளம் செயல்பட முடியவில்லை. கடலோரத்தில் கழிவுகள் உறைந்து இருப்பதால், படகுகள் நிறுத்தத்தையும் வேறு இடத்துக்கு மாற்றிவிட்டோம். மீன்கள் இறந்து மிதப்பதால், துா்நாற்றத்துடன் தோல்நோய் ஏற்படும் வாய்ப்புகளும் காணப்படுகின்றன.

தென்னை மரங்கள் பட்டுப்போய் விட்டன. எனவே, இந்த ஆலை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.