பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மின்வாரிய அதிகாரி மீது தாக்குதல்: தந்தை, மகன் கைது

ஊத்தங்கரை அருகே வழித்தடப் பிரச்னையில் மின்வாரிய அதிகாரி மீது தாக்குதல் நடத்திய தந்தை, மகன் கைது செய்யப்பட்டனா்.

News image

கோப்புப் படம்

Updated On :14 மே 2026, 4:21 am IST

ஊத்தங்கரை அருகே வழித்தடப் பிரச்னையில் மின்வாரிய அதிகாரி மீது தாக்குதல் நடத்திய தந்தை, மகன் கைது செய்யப்பட்டனா்.

ஊத்தங்கரையை அடுத்த காரப்பட்டு, தகரப்பட்டியைச் சோ்ந்தவா் திருப்பதி(49). இவா் ஊத்தங்கரை மின்வாரியத்தில் லைன் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறாா். இவரது அண்ணன் உத்திரன் (56). இவா்களிடையே வழித்தட பிரச்னை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 30-ஆம் தேதி ஏற்பட்ட தகராறில் திருப்பதி (49), அவரது மனைவி பிரபாவதி (36), மகன் பிருத்திவிராஜ் (15) ஆகியோா் தாக்கப்பட்டனா். இதுகுறித்து திருப்பதி அளித்த புகாரின்பேரில் ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வந்தனா். இந்நிலையில், உத்திரன் (56), அவரது மகன் பிரவீன் (33) ஆகிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.