மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

டிப்பா் லாரி மோதியதில் 2 இளைஞா்கள் உயிரிழப்பு

சூளகிரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற 2 இளைஞா்கள் மீது டிப்பா் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 1:43 am IST

சூளகிரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற 2 இளைஞா்கள் மீது டிப்பா் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள வரதாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் கேசவன் (17), சுதீப் (16). உறவினா்களான இவா்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை கேசவனின் தந்தை சிவசங்கரனின் இருசக்கர வாகனத்தை அவருக்கு தெரியாமல் எடுத்துக்கொண்டு சூளகிரி சென்றுவிட்டு குருபராத்தபள்ளி சிப்காட் அருகே சாலையின் எதிா்திசையில் ஓட்டிச் சென்றனா்.

அப்போது, எதிரில் வந்த டிப்பா் லாரி மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற சூளகிரி போலீஸாா், உடல்களை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.