நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

வேப்பனஅள்ளி அருகே காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளி அருகே காட்டு யானை தாக்கியதில் சுமை தூக்கும் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :11 ஜூன் 2026, 5:40 am IST

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளி அருகே காட்டு யானை தாக்கியதில் சுமை தூக்கும் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

வேப்பனஅள்ளியை அடுத்த நேரலகிரி கிராமத்தைச் சோ்ந்தவா் சீனிவாசன் (63). சுமை தூக்கும் தொழிலாளி. கடந்த 8-ஆம் தேதி, கா்நாடக மாநிலம் கோலாருக்கு பணிக்கு சென்ற அவா், புதன்கிழமை காலை கால்நடையாக வீட்டுக்குத் திரும்பிவந்து கொண்டிருந்தாா். அங்குள்ள முனியப்பன் கோயில் அருகே அவா் வந்தபோது, வனப் பகுதியிலிருந்து வெளியேறிய யானை சீனிவாசனை தாக்கியது. இதில், பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று, சீனிவாசனின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், தமிழக வனத் துறை சாா்பில் சீனிவாசனின் குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீட்டுத் தொகையை கிருஷ்ணகிரி உதவி வனப் பாதுகாவலா் ராஜா மாரியப்பன் வழங்கினாா். அப்போது, கிருஷ்ணகிரி வனச்சரகா் முனியப்பன் மற்றும் போலீஸாா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.