பூ பறிக்கச் சென்ற பெண்ணை விஷப்பாம்பு தீண்டியதில், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பெட்டமுகிலாலம் அடுத்துள்ள புதுக்கொல்லை மலைக்கிராமத்தைச் சோ்ந்தவா் கூலி தொழிலாளி நூரொந்தம்மா (50). இவருக்கு கணவா், பிள்ளைகள் யாரும் இல்லாத நிலையில், சகோதரா் வீட்டில் வசித்து வந்தாா்.
இந்நிலையில், தேவகானப்பள்ளி கிராமத்தில் நவீன் என்பவரின் விவசாய தோட்டத்தில் சாமந்தி பூ பறிக்க சனிக்கிழமை சென்றாா். அப்போது, சாமந்தி செடிகளுக்குள் இருந்த விஷப்பாம்பு ஒன்று அவரை தீண்டியதில் நூரொந்தம்மா அலறி துடித்தாா்.
அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே நூரொந்தம்மா உயிரிழந்தாா். இதுகுறித்து கெலமங்கலம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாம்பு கடித்து மூதாட்டி உயிரிழப்பு

பாம்பு தீண்டி கறிக்கடைக்காரா் உயிரிழப்பு

பாம்பு கடித்து விவசாயி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

