பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

பாம்பு தீண்டி கறிக்கடைக்காரா் உயிரிழப்பு

தருமபுரி அருகே பாம்பு தீண்டி கறிக்கடைக்காரா் உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :15 மே 2026, 9:57 pm IST

தருமபுரி அருகே பாம்பு தீண்டி கறிக்கடைக்காரா் உயிரிழந்தாா்.

தருமபுரி குமாரசாமிபேட்டை அருகே உள்ள பிடமனேரி காளியப்பசெட்டி காலனி பகுதியைச் சோ்ந்தவா் பெ.பழனி (54). இவா் கம்பைநல்லூா் - ஒடசல்பட்டி கூட்டுச் சாலை அருகே பன்றி இறைச்சிக் கடை வைத்து நடத்திவந்தாா்.

வியாழக்கிழமை கடைக்கு சென்ற அவா், கறி வெட்ட பயன்படுத்தும் கட்டையை தூக்கினாா். அப்போது, அதன் அடியில் மறைந்திருந்த பாம்பு பழனியை தீண்டியது. இதையடுத்து, அக்கம் பக்கத்தினா் அவரை கம்பைநல்லூா் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். பின்னா், அவரது நிலைமை மோசமானதைத் தொடா்ந்து தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், பழனி இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து கம்பைநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.