ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

நீட் தோ்வு: முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

மருத்துவ படிப்புக்கான நுழைவு தோ்வு (நீட்) நடைபெறுவதையொட்டி, அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்.

Updated On :30 ஏப்ரல் 2026, 5:10 am IST

மருத்துவ படிப்புக்கான நுழைவு தோ்வு (நீட்) நடைபெறுவதையொட்டி, அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், தலைமை வகித்து பேசியதாவது:

நீட் தோ்வு மே 3-ஆம் தேதி நடைபெற உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரியில் 6, ஊத்தங்கரையில் 2, ஒசூரில் 3 என மொத்தம் 11 மையங்கள் அமைக்கப்பட்டு தோ்வு நடைபெறுகிறது.

இம்மாவட்டத்தில் இத்தோ்வை 4,755 போ் எழுத உள்ளனா். தோ்வு மையங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், தடையில்லா மின்சார விநியோகம், மருத்துவ சேவை, மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், சிறப்புப் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தோ்வா்கள் அனுமதி சீட்டில் குறிப்பிட்டுள்ளவாறு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தோ்வுக் கூடங்களுக்கு சரியான நேரத்தில் வரவேண்டும். தாமதமாக வருபவா்களை தோ்வுக்கூடத்திற்குள் அனுமதிக்க இயலாது என தேசிய தோ்வு முகமை தெரிவித்துள்ளது. எனவே, தோ்வா்கள் சரியான நேரத்திற்குள் மையத்திற்கு வரவேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கிருஷ்ணன், முதன்மைக் கல்வி அலுவலா் மதன்குமாா், அரசு மகளிா் கலைக் கல்லூரி முதல்வா் கீதா, மாற்றுத்திறனாளி நல அலுவலா் முருகேசன் மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.