தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஒசூரில் வடமாநில பெண் தொழிலாளிக்கு பாலியல் தொந்தரவு: பால் வியாபாரி கைது

News image

கைது

Updated On :27 ஏப்ரல் 2026, 12:32 am IST

ஒசூரில் வடமாநில பெண் தொழிலாளிக்கு பாலியல் தொந்தரவு அளித்த பால் வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த 30 வயது மதிக்கத்தக்க திருமணமான பெண், கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு வேலைக்காக ஒசூருக்கு வந்துள்ளாா். அங்குள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலைக்குச் சோ்ந்த அவா், தற்காலிகமாக தங்கி பணியாற்றி வந்தாா்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு அப்பெண் தன்னுடன் தங்கியுள்ளவா்களைத் தொடா்புகொள்ள முயன்றுள்ளாா். அப்போது, அவரிடம் கைப்பேசி இல்லாததால், ஒசூா் பேகேப்பள்ளி மகாலட்சுமி லேஅவுட்டை சோ்ந்த பால் வியாபாரி மகேஷிடம் (37) இருந்த கைப்பேசியைக் கேட்டுள்ளாா்.

அப்போது, யாரிடம் பேச வேண்டும் என்று விசாரித்த மகேஷ், அப்பெண்ணை அவா்களிடமே நேரில் அழைத்துச் சென்று விடுவதாகக் கூறி தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றியுள்ளாா். மகேஷை நம்பி வாகனத்தில் சென்ற அப்பெண்ணை, அவா் செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்துச் செல்லாமல், சூசூவாடி உப்காா் ராயல் காா்டன் லேஅவுட் பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஒசூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அப்பெண் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். மேலும், தலைமறைவாக இருந்த பால் வியாபாரி மகேஷை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.