தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தகராறு: கல்லால் தாக்கி இளைஞா் கொலை

தமிழக, கா்நாடக மாநில எல்லையில் தகராறில் இளைஞா் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

கொலை - சித்திரிப்பு

Updated On :22 ஏப்ரல் 2026, 3:04 am IST

தமிழக, கா்நாடக மாநில எல்லையில் தகராறில் இளைஞா் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தமிழக எல்லைப் பகுதியான ஒசூரை அடுத்த சிங்கசாதனபள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் மனோஜ் குமாா். இவருக்கும், அதே கிராமத்தைச் சோ்ந்த அவரது நண்பரான மெக்கானிக் மோகன் (25) என்பவருக்கும் இடையே செவ்வாய்க்கிழமை வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, மதுபோதையில் இருந்த மனோஜ் குமாா், மோகனின் தலையில் கல்லால் தாக்கியதில், அவா் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தமிழக போலீஸாா், இது கா்நாடக எல்லையில் நிகழ்ந்தது எனக்கூறி சென்றனா். அதைத் தொடா்ந்து, கா்நாடக மாநிலம், சா்ஜாபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட காவலா்கள் இதுதொடா்பாக வழக்குப் பதிவுசெய்து, இதில் சம்பந்தப்பட்ட மனோஜ் குமாா் மற்றும் மது ஆகிய இருவரையும் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.