தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

முதியவா் கல்லால் தாக்கி கொலை: எலக்ட்ரீசியனுக்கு 10 ஆண்டுகள் சிறை

அவிநாசி அருகே உப்பிலிபாளையத்தில் முதியவரை கல்லால் அடித்துக் கொலை செய்த எலக்ட்ரீசியனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

News image
Updated On :2 மே 2026, 6:01 am IST

அவிநாசி அருகே உப்பிலிபாளையத்தில் முதியவரை கல்லால் அடித்துக் கொலை செய்த எலக்ட்ரீசியனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி திருவாசல் பகுதியைச் சோ்ந்த பழனிவேல் மகன் விக்னேஷ்வரன் (29), அவிநாசி அருகே நம்பியம்பாளையத்தில் வசித்து வருகிறாா். இவா் கடந்த 2024 ஆம் ஆண்டு, அவிநாசி அருகே உப்பிலிபாளையம் கூட்டுறவு சங்கத்தின் சுற்றுச்சுவா் ஏறி திருட முயன்றாா். அப்போது உள்ளிருந்த இரவுக் காவலா் சப்தம் போடவும், விக்னேஸ்வரன் தப்பியோடிள்ளாா்.

உடனே வெளியே இருந்த பழனி (60) என்பவா் அவரைப் பிடிக்க முயன்றுள்ளாா். அப்போது விக்னேஷ்வரன் கல்லால் தாக்கியதில் பழனி பலத்த காயமடைந்து உயிரிழந்தாா். இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விக்னேஷ்வரனைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை திருப்பூா் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமா்வு 2-இல் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீதா், முதியவரைக் கொலை செய்த விக்னேஷ்வரனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பு வழங்கினாா். அரசு வழக்குரைஞா் பூமதி ஆஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.