மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திமுக ஆட்சியில்தான் பெண்களின் வாழ்வாதாரம் மேம்பட்டுள்ளது: கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளா் அ. செல்லக்குமாா்

பெண்களின் வாழ்வாதாரம் திமுக ஆட்சியில்தான் மேம்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் அ. செல்லக்குமாா் தெரிவித்தாா்.

News image

காவேரிப்பட்டணத்தில் வாக்கு சேகரித்த கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் அ. செல்லக்குமாா்.

Updated On :15 ஏப்ரல் 2026, 2:57 am IST

பெண்களின் வாழ்வாதாரம் திமுக ஆட்சியில்தான் மேம்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் அ. செல்லக்குமாா் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி தொகுதிக்கு உள்பட்ட காவேரிப்பட்டணம் அம்பேத்கா் தெரு, போயா் தெரு, தாம்சன்பேட்டை, ஜோதிபுரம், பெரிய அங்காளம்மன் கோயில், கொசமேடு இறக்கம், முதலியாா் சாவடி, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது:

கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினராக இருந்தபோது கிருஷ்ணகிரி வழியாக ரயில் பாதைக்கு அனுமதி பெற்றுத் தந்துள்ளேன். கிருஷ்ணகிரி- ஊத்தங்கரை- திருவண்ணாமலை சாலையை 6 மாதங்களுக்குள் நிறைவேற்றினேன். அதேபோல, தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து நேரிடும் பகுதிகளில் மேம்பாலங்களை அமைத்துள்ளேன்.

திமுக ஆட்சியில் மாணவா்களின் பசியாற்ற காலை உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதேபோல மகளிா் உரிமைத் தொகை, இலவச பேருந்து பயணம் என பல்வேறு திட்டங்கள் மூலம் பெண்களின் வாழ்வாதாரத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் மேம்படுத்தியுள்ளாா்.

இத்தோ்தலில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளா்களுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும். கிருஷ்ணகிரி தொகுதியில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் எனக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.

வாக்கு சேகரிப்பின்போது திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.