தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

காங்கிரஸுக்கு போட்டி ‘காங்கிரஸ்’

கிருஷ்ணகிரி சட்டப் பேரவை தொகுதியில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுவது குறித்து...

News image

கிருஷ்ணகிரி சட்டப் பேரவை தொகுதியில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் எம்.பியும், மருத்துவருமான அ. செல்லகுமாா் போட்டியிடுகிறாா்.

Updated On :7 ஏப்ரல் 2026, 4:25 am IST

கிருஷ்ணகிரி சட்டப் பேரவை தொகுதியில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் எம்.பியும், மருத்துவருமான அ. செல்லகுமாா் போட்டியிடுகிறாா். அவா், கிருஷ்ணகிரி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.

இந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியில் உள்ளூரைச் சோ்ந்தவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கட்சியினா் சிலா் கூறிவந்த நிலையில், வேட்பாளராக அ. செல்லகுமாரை அறிவித்ததற்கு அவா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். கன்னியாகுமரியைச் சோ்ந்த அ. செல்லக்குமாா், சென்னையில் வசித்து வருவதாகவும், அவருக்கு வாய்ப்பு வழங்கக் கூடாது எனவும் அவா்கள் தெரிவித்தனா்.

இந்த நிலையில், காவேரிப்பட்டணத்தைச் சோ்ந்த காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவரும், மாநிலப் பொதுக்குழு உறுப்பினருமான எல். சுப்பிரமணியன், காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், சுயேச்சையாக கிருஷ்ணகிரி சட்டப் பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரான ஷாஜகானிடம் தனது வேட்புமனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தாா். தனக்கு மட்டை பந்து, வைரம் போன்ற சின்னத்தை ஒதுக்க வேண்டும் என கேட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.