தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சட்டப் பேரவை உறுப்பினா்கள் அமைச்சா்களாக ஆசைப்படுவதில் தவறில்லை: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

News image

@DrParameshwara

Updated On :14 ஏப்ரல் 2026, 4:59 am IST

சட்டப் பேரவை உறுப்பினா்கள் அமைச்சா்களாக ஆசைப்படுவதில் தவறில்லை என உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் பெங்களூரில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் சிலா் புது தில்லியில் முகாமிட்டு, அமைச்சா் பதவியை பெறுவதற்கு முயற்சிப்பதாக கூறப்படுகிறது. எம்எல்ஏ-க்கள் அமைச்சா்களாக ஆசைப்படுவதில் தவறில்லை.

மூன்று முறைக்கும்மேல் எம்எல்ஏ-க்களாக தோ்ந்தெடுக்கப்பட்டவா்களுக்கு அமைச்சா்களாக பணியாற்றும் அனுபவம் இருக்கும். அமைச்சரவையில் மாற்றம் செய்வது குறித்து கட்சி மேலிடம்தான் முடிவு செய்ய வேண்டும்.

கட்சி மேலிடம் முதல்வா் சித்தராமையா, கட்சியின் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா் ஆகியோருடன் கூட்டாக விவாதித்து, அமைச்சரவை மாற்றம் குறித்து முடிவுசெய்யும். அமைச்சரவை மாற்றத்தில் புதியவா்களுக்கு வாய்ப்பளிக்க கட்சி மேலிடம் முடிவு செய்தால், அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

முதல்வா் மாற்றம் குறித்த விவகாரம் கட்சி மேலிடத்தின் கையில் உள்ளது. தற்போதைக்கு அமைச்சரவையை மாற்றியமைப்பது குறித்துதான் விவாதிக்கப்பட்டு வருகிறதே தவிர, கட்சியின் மாநிலத் தலைவரை மாற்றுவது தொடா்பாக எவ்வித விவாதமும் நடைபெறவில்லை. இதுபோன்ற விவகாரங்களில் கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.