ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ராஜஸ்தான் சட்டப் பேரவைக்கு தற்கொலைத் தாக்குதல் மிரட்டல்

ராஜஸ்தான் சட்டப் பேரவைக்கு தற்கொலைத் தாக்குதல் மிரட்டல்...

News image

ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு தற்கொலைத் தாக்குதல் மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து பேரவை வளாகத்தைச் சோதனையிட வந்த மாநில பேரிடா் மீட்புப் படையினா்.

Updated On :25 ஏப்ரல் 2026, 4:21 am IST

ராஜஸ்தான் சட்டப் பேரவை வளாகத்தில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்படும் என்று மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட மிரட்டலைத் தொடா்ந்து, அங்கு வெள்ளிக்கிழமை தீவிர சோதனை நடத்தப்பட்டது.

சட்டப் பேரவை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜெய்பூரில் உள்ள சட்டப் பேரவையின் அதிகாரபூா்வ மின்னஞ்சல் முகவரிக்கு வந்த ஒரு மின்னஞ்சலில், ‘தங்களின் உடலில் கட்டப்பட்ட வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து, சட்டப் பேரவையில் 2 போ் தாக்குதல் நடத்துவா்’ என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. வெள்ளிக்கிழமை பிற்பகலில் இத்தாக்குதல் நடத்தப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, சட்டப் பேரவை வளாகம் முழுவதும் மோப்ப நாய்களின் உதவியுடன் வெடிகுண்டு அகற்றும் நிபுணா்கள், அங்குலம் அங்குலமாக சோதனை மேற்கொண்டனா். எனினும், சந்தேகத்துக்கு இடமான பொருள் எதுவும் கண்டறியப்படவில்லை. முன்னெச்சரிக்கையாக, பேரவை வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2 வாரங்களில் ராஜஸ்தான் சட்டப் பேரவைக்கு விடுவிக்கப்பட்ட இரண்டாவது மிரட்டல் இதுவாகும். இதையொட்டி, பேரவை வளாகம் உள்பட நகரின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் அனுப்பியது யாா் என்பதைக் கண்டறிய தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.