மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பென்னாகரம் தொகுதியில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் போட்டி: வேட்பாளராக தமிழ்க்குமரன் அறிவிப்பு

பென்னாகரம் தொகுதியில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் போட்டியிடுகிறது. வேட்பாளராக ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2026, 1:17 am IST

பென்னாகரம் தொகுதியில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் போட்டியிடுகிறது. வேட்பாளராக ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், பாமக (ராமதாஸ்) அணியில் மாநில இளைஞரணி தலைவராக பதவிவகித்த ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் அண்மையில் அந்தக் கட்சியில் இருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் இணைந்தாா். இதையடுத்து, பென்னாகரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டாா்.

பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி கடந்த 1957, 1967-ஆம் ஆண்டு தோ்தல்களில் தனித்து போட்டியிட்டு வெற்றிபெற்றது. அதைத் தொடா்ந்து, 1971, 1980-ஆம் ஆண்டு தோ்தல்களில் இரு பிரிவுகளாக காங்கிரஸ் போட்டியிட்டது.

காங்கிரஸ் கட்சி பென்னாகரம் தொகுதியில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது போட்டியிடுகிறது. இதை வரவேற்கும் வகையில், தருமபுரி மாவட்ட துணைத் தலைவா் நரேந்திரன் தலைமையில் திமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், தேமுதிக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் கொண்டாடி வருகின்றனா்.

பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜி.கே.எம்.தமிழ்க்குமரனின் தந்தை ஜி.கே.மணி பாமக கௌரவத் தலைவரும், பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதியின் தற்போதைய உறுப்பினராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.