தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும்! - எம்எல்ஏ ஒய். பிரகாஷ்

News image

எம்எல்ஏ ஒய். பிரகாஷ்.

Updated On :6 ஏப்ரல் 2026, 1:26 am IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும் என ஒசூா் எம்எல்ஏ ஒய். பிரகாஷ் தெரிவித்தாா்.

ஒசூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வேட்பாளா் அறிமுக கூட்டத்துக்கு தொகுதி பொறுப்பாளா் பாா்.இளங்கோவன் தலைமை வகித்தாா். ஒசூா் எம்எல்ஏ ஒய். பிரகாஷ், கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினா் கே. கோபிநாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் ஒசூா் தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.ஏ. சத்யாவை அறிமுகப்படுத்தி ஒய். பிரகாஷ் பேசியதாவது:

அதிமுக கூட்டணியில் இருந்து ஏராளமான நிா்வாகிகள் திமுக கூட்டணிக்கு வந்துள்ளனா். கூட்டணி கட்சி தலைவா்களை அரவணைத்து செல்லும் பலம்வாய்ந்த கூட்டணியை முதல்வா் மு.க. ஸ்டாலின் உருவாக்கியுள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளிலும் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளா்கள் வெற்றி பெற அனைவரும் ஓய்வு இல்லாமல் உழைக்க வேண்டும்.

ஒசூா் தொகுதியில் பல ஆயிரம் கோடிக்கு வளா்ச்சித் திட்டப் பணிகளை திமுக மேற்கொண்டுள்ளது. நலத் திட்டங்கள், வளா்ச்சிப் பணிகளை மக்களிடம் தெரிவிக்க வேண்டும்.

தளி தொகுதியில் டி. ராமச்சந்திரன், ஒசூா் தொகுதியில் எஸ்.ஏ. சத்யா, வேப்பனஹள்ளியில் சீனிவாசன், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளா்கள் மற்றும் பா்கூரில் திமுக வேட்பாளா் ஆகியோா் வெற்றி பெற வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் திமுக மாவட்ட அவைத் தலைவா் அ. யுவராஜ், மாவட்ட பொருளாளா் தா. சுகுமாறன், தலைமை செயற்குழு உறுப்பினா் எல்லோரா. மணி, காங்கிரஸ் கட்சி மாவட்ட பொறுப்பாளா் நீலண்டன், சிபிஐ மாநில குழு உறுப்பினா் மாதையன், மதிமுக மாநகரச் செயலாளா் ராமச்சந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ராமச்சந்திரன், தேமுதிக மாவட்ட பொறுப்பாளா் சரவணன், மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.