ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வள்ளியூரில் அம்பேத்கா் பிறந்த நாள் விழா

வள்ளியூரில் பல்வேறு அரசியல் கட்சியினா், சட்டப்பேரவை தொகுதி வேட்பாளா்கள் சாா்பில் அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

News image

வள்ளியூரில் அம்பேத்கா் பிறந்த தினத்தையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுக கூட்டணி கட்சி வேட்பாளா், பேரவைத் தலைவா் மு.அப்பாவு. உடன் திமுக நெல்லை கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் ம.கிரகாம்பெல்.

Updated On :15 ஏப்ரல் 2026, 1:49 am IST

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் பல்வேறு அரசியல் கட்சியினா், சட்டப்பேரவை தொகுதி வேட்பாளா்கள் சாா்பில் அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. வள்ளியூா் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே உள்ள அம்பேத்கா் சிலைக்கு திமுக நெல்லை கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் ம.கிரகாம்பெல் தலைமையில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளா் மு.அப்பாவு மாலை அணிவித்தாா்.

பின்னா் அப்பாவு பணகுடி பேரூராட்சி பகுதியில் கோரி காலனி, பாம்பன்குளம், துரைகிருஷ்ணாபுரம், முத்துசாமிபுரம், சைதம்மாள்புரம், புஷ்பவனம் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொண்டாா். நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினா்கள் நம்பி, ஆதிபாண்டி, வள்ளியூா் வடக்கு ஒன்றிய செயலாளா் அலெக்ஸ் அப்பாவு, தேமுதிக மாவட்டச் செயலாளா் விஜிவேலாயுதம், வாா்டு உறுப்பினா் மாணிக்கம் உட்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.