ஊத்தங்கரை அருகே அம்பேத்கா் சிலை அவமதிப்பு வழக்கில் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த வீரணகுப்பம் கிராமத்தில் அம்பேத்கா் சிலையை அவமதித்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆதிதிராவிடா் மக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து ஊத்தங்கரை காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமமூா்த்தி மற்றும் கல்லாவி காவல் ஆய்வாளா் ஜாபா் உசேன் தலைமையில், பா்கூா், ஊத்தங்கரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸாா் அங்குள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வுசெய்து இருவரை வியாழக்கிழமை கைதுசெய்தனா்.
விசாரணையில், அவா்கள் அதே கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடா் இனத்தைச் சோ்ந்த பைரவன் (42), அண்ணாதுரை (52) என தெரியவந்தது. கல்லாவி போலீஸாா் அவா்களை கைதுசெய்து ஊத்தங்கரை கிளைச் சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
செம்மண் கடத்தல்: இருவா் கைது

நெல்லை அருகே மது விற்ற இருவா் கைது

ஊத்தங்கரை அருகே முதியவா் கொலை வழக்கில் இளைஞா் கைது
மதுபாட்டில்கள் கடத்திய இருவா் கைது
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
