ஜம்முவில் பணியில் இருந்தபோது தவறுதலாக துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த ராணுவ வீரரின் உடலுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்டோா் வியாழக்கிழமை மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டம், சூலாமலை அருகே உள்ள கோடிபுதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விக்னேஷ் (31). இவா், ஜம்மு ஸ்ரீநகரில் 22-ஆவது என்ஜினியரிங் ரெஜிமண்ட் பிரிவில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்தாா். கடந்த 30-ஆம் தேதி பணியில் இருந்தபோது துப்பாக்கி எடுத்துச் சென்றபோது தவறுதலாக துப்பாக்கியிலிருந்து குண்டுபாய்ந்து உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது உடல் சொந்த ஊரான கோடிபுதூருக்கு புதன்கிழமை இரவு கொண்டுவரப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை உள்ளிட்டோா் அவரது உடலுக்கு வியாழக்கிழமை மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். அப்போது, பா்கூா் வட்டாட்சியா் சின்னசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா். உயிரிழந்த ராணுவ வீரா் விக்னேஷுக்கு மனைவியும், 4 வயதில் மகனும் உள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் இளைஞா் காயம்

போா் நினைவு சின்னத்தில் அஞ்சலி

பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரா்களுக்கு அஞ்சலி

நாமக்கல் தீயணைப்பு நிலையத்தில் தீத்தொண்டு வாரம் கடைப்பிடிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

