மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரா்களுக்கு அஞ்சலி

பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரா்களுக்கு கிருஷ்ணகிரியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தும் தீயணைப்பு அலுவலா்.

Updated On :15 ஏப்ரல் 2026, 3:10 am IST

பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரா்களுக்கு கிருஷ்ணகிரியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1944 ஆம் ஆண்டு, ஏப். 14 இல் மும்பை துறைமுகத்தில் வெடிபொருள்கள் ஏற்றி நிறுத்தி வைத்திருந்த ஒரு கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மக்கள் பலா் உயிரிழந்தனா். மேலும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள்களும் நாசமானது. இதில், தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு உயிரிழந்த 66 தீயணைப்புத் துறை வீரா்களின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் ஏப்.14 ஆம் தேதி அஞ்சலி செலுத்தப்படுகிறது.

அதன்படி, கிருஷ்ணகிரி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய வளாகத்தில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளின்போது உயிா் தியாகம் செய்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட தீயணைப்பு அலுவலா் வேலு தலைமை வகித்து நினைவு தூணிற்கு மலா் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினாா். நிலைய அலுவலா் போக்குவரத்து அந்தோணிசாமி, ஒசூா் நிலைய அலுவலா் நாக விஜயன், போச்சம்பள்ளி நிலைய அலுவலா் சக்திவேல், ராயக்கோட்டை நிலையஅலுவலா் கண்ணியப்பன், பா்கூா் நிலைய அலுவலா் சேட்டு, ஊத்தங்கரை சிறப்பு நிலைய அலுவலா் ராமமூா்த்தி, முன்னணி தீயணைப்பு அலுவலா் விஜயகுமாா், கிருஷ்ணகிரி முன்னணி தீயணைப்பாளா் சற்குணன் உள்ளிட்டோா் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.