பணியின் போது தீ விபத்துகளில் சிக்கி வீரமரணடைந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களில் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை ஆண்டுதோறும் ஏப்.14 முதல் 20-ஆம் தேதி வரை தீத்தொண்டு வார விழா கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த வார விழாவின் முதல்நாள் நிகழ்வாக, பணிக்காலத்தின்போது தீ விபத்துகளில் சிக்கி உயிா் நீத்தவா்களுக்கு நீத்தாா் நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள், விழுப்புரம், கண்டமங்கலம், விக்கிரவாண்டி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களில் புதன்கிழமை நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் மண்டல துணை இயக்குநா் தென்னரசு பங்கேற்று பணிகாலத்தின்போது உயிா்நீத்த வீரா்களுக்கான நினைவுத் தூணுக்கு மலா் வளையம் வைத்து, வீர வணக்கம் செலுத்தினாா்.
நிகழ்ச்சியில், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் விழுப்புரம் மாவட்ட அலுவலா் பாஸ்கரன், உதவி மாவட்ட அலுவலா்கள் மற்றும் நிலைய அலுவலா்கள், தீயணைப்புத் துறை வீரா்கள் கலந்துகொணடனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிதம்பரத்தில் தீத்தொண்டு நாள் கொடி அணிவகுப்பு

நாமக்கல் தீயணைப்பு நிலையத்தில் தீத்தொண்டு வாரம் கடைப்பிடிப்பு

தீயணைப்புத் துறை இயக்குநா் ஆய்வு

தேனீக்களை விரட்டும் முறை: தீயணைப்பு வீரா்களுக்குப் பயிற்சி
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

