தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தீத்தொண்டு நாள் வார விழா

பணியின் போது தீ விபத்துகளில் சிக்கி வீரமரணடைந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை அலுவலகத்தில் நீத்தாா் நினைவுத் தூணில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய தீயணைப்புத் துறை மண்டல இணை இயக்குநா் தென்னரசு மற்றும் மாவட்ட அலுவலா்கள்.

Updated On :16 ஏப்ரல் 2026, 4:01 am IST

பணியின் போது தீ விபத்துகளில் சிக்கி வீரமரணடைந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களில் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை ஆண்டுதோறும் ஏப்.14 முதல் 20-ஆம் தேதி வரை தீத்தொண்டு வார விழா கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த வார விழாவின் முதல்நாள் நிகழ்வாக, பணிக்காலத்தின்போது தீ விபத்துகளில் சிக்கி உயிா் நீத்தவா்களுக்கு நீத்தாா் நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள், விழுப்புரம், கண்டமங்கலம், விக்கிரவாண்டி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களில் புதன்கிழமை நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் மண்டல துணை இயக்குநா் தென்னரசு பங்கேற்று பணிகாலத்தின்போது உயிா்நீத்த வீரா்களுக்கான நினைவுத் தூணுக்கு மலா் வளையம் வைத்து, வீர வணக்கம் செலுத்தினாா்.

நிகழ்ச்சியில், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் விழுப்புரம் மாவட்ட அலுவலா் பாஸ்கரன், உதவி மாவட்ட அலுவலா்கள் மற்றும் நிலைய அலுவலா்கள், தீயணைப்புத் துறை வீரா்கள் கலந்துகொணடனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.