தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தேனீக்களை விரட்டும் முறை: தீயணைப்பு வீரா்களுக்குப் பயிற்சி

விழுப்புரம் மண்டல தீயணைப்பு வீரா்களுக்கு தேனீக்களை பாதுகாப்பாக விரட்டும் முறைகள் குறித்த பயிற்சி வகுப்பு விழுப்புரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

விழுப்புரத்தில் நடைபெற்ற தீயணைப்புத்துறை வீரா்களுக்கான பயிற்சியில் கலந்து கொண்டோா்.

Updated On :12 மார்ச் 2026, 12:03 am IST

விழுப்புரம் மண்டல தீயணைப்பு வீரா்களுக்கு தேனீக்களை பாதுகாப்பாக விரட்டும் முறைகள் குறித்த பயிற்சி வகுப்பு விழுப்புரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, விழுப்புரம் மண்டலத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் உள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் பணிபுரியும் அலுவலா்கள் மற்றும் வீரா்களுக்கு தேனீக்களை பாதுகாப்பாக விரட்டுவது குறித்த அடிப்படை பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை விழுப்புரம் மண்டல துணை இயக்குநா் க.தென்னரசு தலைமை வகித்தாா். விழுப்புரம் மாவட்ட அலுவலா் பாஸ்கரன் முன்னிலை வகித்தாா்.

பயிற்சியாளா் சுதந்திர செல்வன் பங்கேற்று, நறுமணப் பொருள்கள் மற்றும் தூபம் போடுதல் முறையைப் பயன்படுத்தி தேனீக்களை விரட்டும் முறைகள் குறித்து உரிய விளக்கங்களுடன் பயிற்சியளித்தாா்.

விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை உதவி மாவட்ட அலுவலா்கள் ஜெய்சங்கா், செந்தில்குமாா், விழுப்புரம் நிலைய அலுவலா் ந.த.சுரேஷ்குமாா் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறை வீரா்கள் பயிற்சியில் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.