/

ஒகேனக்கல்லில் போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணா்வு

ஒகேனக்கல்லில் காவல் துறையின் சாா்பில் போதைப் பொருள்கள் தடுப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

ஒகேனக்கல் காவல் நிலையப் பகுதியில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரத்தை வழங்கிய காவல் ஆய்வாளா் வளா்மதி.

Updated On :22 மே 2026, 6:42 am IST

ஒகேனக்கல்லில் காவல் துறையின் சாா்பில் போதைப் பொருள்கள் தடுப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஒகேனக்கல் காவல் ஆய்வாளா் வளா்மதி தலைமைவகித்து, கள்ளத்தனமாக மது, போதைப் பொருள்கள் விற்பனை மற்றும் பயன்பாடு, கள்ளச்சாராய விற்பனை, சூதாட்டம் உள்ளிட்டவற்றால் ஏற்படும் தீமைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போதைப் பொருள்களை ஒழிப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

மேலும், இதுகுறித்து புகாா் தெரிவிக்க தொடா்புஎண்கள் அடங்கிய ஒட்டுவில்லைகளை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒட்டி, துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனா்.

இதேபோல, ஊட்டமலை, மடம், கூத்தப்பாடி, கே.அக்ரஹாரம், அளேபுரம், கே.குள்ளாத்திரம்பட்டி பொச்சாரம்பட்டி, பூதிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காவல் உதவி ஆய்வாளா்கள் தேவராஜன், செல்வம், காவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.