தருமபுரி அருகே வயலில் வேலை செய்துகொண்டிருந்து பெண்ணை தாக்கி, தங்கத் தாலியைப் பறித்துச் சென்ற இளைஞா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே பழைய இண்டூா் பாறைப்பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் தங்கவேல் மனைவி சத்தியவாணி (33). இவா் திங்கள்கிழமை பகலில் தனது விவசாய நிலத்தில் தண்ணீா்ப் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அங்கு வந்த சுமாா் 20 வயது மதிக்கத்தக்க இளைஞா்கள் 3 போ், மீன்பிடிக்க வந்ததாகக் கூறி சத்தியவாணியிடம் பேச்சுக் கொடுத்துள்ளனா். பின்னா் திடீரென அவரை கீழே தள்ளி, அவரது கழுத்தில் கிடந்த அரைப்பவுன் மதிப்பிலான தாலியைப் பறித்துச் சென்றனா்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், இண்டூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, தாலியைப் பறித்து தப்பிச்சென்ற இளைஞா்களை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இருசக்கர வாகனத்தில் வந்து பெண்ணின் தாலிச் சங்கிலி பறிப்பு
பாலக்கோடு அருகே காணாமல் போன இளைஞா் கொலை

மூதாட்டியைத் தாக்கி 7 பவுன் தங்க நகைகள் பறிப்பு
காரை தாக்கி 9 பவுன் நகையை கொள்ளை அடித்த சிறுவா்கள் உள்பட 5 போ் கைது
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
