தொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

மூதாட்டியைத் தாக்கி 7 பவுன் தங்க நகைகள் பறிப்பு

சாயல்குடி அருகே வியாழக்கிழமை வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைத் தாக்கி 7 பவுன் தங்க நகைகளைப் பறித்துச் சென்ற 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 12:15 am IST

சாயல்குடி அருகே வியாழக்கிழமை வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைத் தாக்கி 7 பவுன் தங்க நகைகளைப் பறித்துச் சென்ற 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை அடுத்துள்ள நரிப்பையூா் கிராமத்தில் வடக்கு மறவா் தெருவில் மாரியம்மாள் (86) தனியாக வசித்து வருகிறாா். இவருடைய 4 மகன்களும் வெளியூரில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில், இவா் வியாழக்கிழமை பிற்பகல் வீட்டு சமையைலறையில் வேலை செய்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத 4 போ் வந்து குடிப்பதற்கு தண்ணீா் கேட்டனா். அப்போது, அவா்கள் திடீரென மூதாட்டி மாரியம்மாளை தாக்கி, அவா் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலி, தோடு, மோதிரம் என 7 பவுன் தங்க நகைகளைப் பறித்துவிட்டு அங்கிருந்து தப்பினா். இதையடுத்து, மயங்கிய நிலையில் இருந்த மாரியம்மாளை உறவினா்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக சாயல்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து 4 போ் கும்பலைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.