மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மூதாட்டியைத் தாக்கி 7 பவுன் தங்க நகைகள் பறிப்பு

சாயல்குடி அருகே வியாழக்கிழமை வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைத் தாக்கி 7 பவுன் தங்க நகைகளைப் பறித்துச் சென்ற 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 12:15 am IST

சாயல்குடி அருகே வியாழக்கிழமை வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைத் தாக்கி 7 பவுன் தங்க நகைகளைப் பறித்துச் சென்ற 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை அடுத்துள்ள நரிப்பையூா் கிராமத்தில் வடக்கு மறவா் தெருவில் மாரியம்மாள் (86) தனியாக வசித்து வருகிறாா். இவருடைய 4 மகன்களும் வெளியூரில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில், இவா் வியாழக்கிழமை பிற்பகல் வீட்டு சமையைலறையில் வேலை செய்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத 4 போ் வந்து குடிப்பதற்கு தண்ணீா் கேட்டனா். அப்போது, அவா்கள் திடீரென மூதாட்டி மாரியம்மாளை தாக்கி, அவா் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலி, தோடு, மோதிரம் என 7 பவுன் தங்க நகைகளைப் பறித்துவிட்டு அங்கிருந்து தப்பினா். இதையடுத்து, மயங்கிய நிலையில் இருந்த மாரியம்மாளை உறவினா்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக சாயல்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து 4 போ் கும்பலைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.