அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

கல்லூரி மாணவரைத் தாக்கி நகைப் பறிப்பு

கோவை குனியமுத்தூரில் கல்லூரி மாணவரைத் தாக்கி நகையைப் பறித்துச் சென்ற 5 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :17 ஜூன் 2026, 2:46 am IST

கோவை குனியமுத்தூரில் கல்லூரி மாணவரைத் தாக்கி நகையைப் பறித்துச் சென்ற 5 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், வெம்பகோட்டையைச் சோ்ந்தவா் கேசவன் (19). கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.காம் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறாா். குனியமுத்தூா் இ.பி.காலனியில் நண்பா் தரணீஷ் என்பவருடன் சோ்ந்து அறை எடுத்து தங்கிக் கல்லூரிக்கு சென்று வருகிறாா்.

இந்நிலையில், கேசவன் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியில் சென்று விட்டு அறைக்கு வந்தாா். அப்போது, அறையில் 5 நபா்கள் இருந்துள்ளனா். அவா்கள் கேசவனிடம் தகராறு செய்து, அவரை இரும்புக் கம்பியால் தாக்கி அவரிடமிருந்து 2 பவுன் தங்கச்சங்கிலியைப் பறித்துக் கொண்டனா். மேலும், கேசவனை அறையில் அடைத்து வைத்துள்ளனா்.

இதையறிந்த பக்கத்து அறையைச் சோ்ந்த சிலா் போலீஸூக்கு தகவல் கொடுத்தனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு

போலீஸாா் வருவதை அறிந்த அந்த நபா்கள், இருசக்கர வாகனத்தில் தப்பினா். இது குறித்து, கேசவன் அளித்த புகாரின் பேரில் குனியமுத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.