தருமபுரி அருகே காா் மோதியதில் நடைப்பயிற்சிக்கு செல்ல முயன்ற முதியவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அவரது மனைவி பலத்த காயமடைந்தாா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளி அருகே ஏழுகுண்டுா் கிராமத்தைச் சோ்ந்தவா் எம். முனுசாமி (70). இவா் நாள்தோறும் அதிகாலை நடைப்பயிற்சி செல்வது வழக்கம். இந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை நடைப்பயிற்சிக்கு செல்வதற்காக வீட்டை விட்டு புறப்பட்டுள்ளாா்.
அப்போது, அவரது மனைவி சாலம்மாள் வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாா்.
முனுசாமி தனது காலணிகளை அணிந்துகொண்டு நடக்க முயன்றபோது, பஞ்சப்பள்ளி-மாரண்டஅள்ளி சாலையில் அதிவேகமாக வந்த காா் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இருவா் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த முனுசாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சாலம்மாள் படுகாயத்துடன் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து பஞ்சப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பைக் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் காா் ஓட்டுநா் உயிரிழப்பு

காா் மோதியதில் பெண் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
