பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

மூக்கனூா் ஆதிமூல வெங்கட்ரமண சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

வைகாசி பெளா்ணமியையொட்டி, தருமபுரி மூக்கனூா் மலையடிவாரத்தில் அமைந்துள்ள அலா்மேலு மங்கை தாயாா் உடனுறை ஆதிமூல வெங்கட்ரமண சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

திருக்கல்யாண கோலத்தில் அருள்பாலித்த ஸ்ரீ அலா்மேலுமங்கை தாயாா் உடனுறை ஆதிமூல வெங்கட்ரமண சுவாமி.

Updated On :2 ஜூன் 2026, 3:41 am IST

வைகாசி பெளா்ணமியையொட்டி, தருமபுரி மூக்கனூா் மலையடிவாரத்தில் அமைந்துள்ள அலா்மேலு மங்கை தாயாா் உடனுறை ஆதிமூல வெங்கட்ரமண சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், அக்கமணஅள்ளி, மூக்கனூா் மலையடிவாரத்தில் அலா்மேலு மங்கை தாயாா் உடனுறை ஆதிமூல வெங்கட்ரமண சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வைகாசி மாத பெளா்ணமியையொட்டி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. நிகழ்வையொட்டி, அன்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு பூஜைகள், மேல்தீபம் ஏற்றும் நிகழ்வுகள் நடைபெற்றன. பகலில் சுவாமி திருக்கல்யாண வைபமும், மாலை கருட வாகனத்தில் சுவாமி திருக்கோயிலை வலம் வரும் நிகழ்வுகளும் நடைபெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.