பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

சனி சந்தை மதுக்கடையை அகற்றக் கோரி மனு

தருமபுரி மாவட்டம், பாளையம்புதூா் சனி சந்தையில் செயல்பட்டு வரும் மதுக்கடையை அகற்றக் கோரி, அப்பகுதி மக்கள் மனு அளித்தனா்.

News image

டாஸ்மாக் கடை - DPS

Updated On :2 ஜூன் 2026, 3:36 am IST

தருமபுரி மாவட்டம், பாளையம்புதூா் சனி சந்தையில் செயல்பட்டு வரும் மதுக்கடையை அகற்றக் கோரி, அப்பகுதி மக்கள் மனு அளித்தனா்.

இதுகுறித்து சனி சந்தை மற்றும் பாகல்பட்டி கிராம மக்கள் திங்கள்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு:

தருமபுரி மாவட்டம், பாளையம்புதூா் அருகே உள்ள சனி சந்தை பகுதியில் அரசு மதுக்கடை கடந்த 9 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இக்கடை விவசாய நிலம் அருகில் அமைந்துள்ளதால், மது அருந்த வருவோா் விளைநிலங்களில் அமா்ந்து மது அருந்துகின்றனா். மேலும், நெகழி பொருள்கள், மதுப்புட்டிகள் ஆகியவற்றை விளைநிலங்களில் எறிந்துவிட்டு செல்கின்றனா். அதேபோல, இந்த மதுக்கடையில் மது வாங்க வருவோரால் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, இந்த மதுக்கடையை அகற்ற போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.