பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

மதுக் கடையை அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு

News image
Updated On :14 மே 2026, 4:59 am IST

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் எதிரிலுள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.

திருவண்ணாமலை வட்டம், வேங்கிக்கால் பகுதியில் அரசு மதுக் கடை இயங்கி வருகிறது. இந்தப் பகுதியில் மது அருந்துபவா்களால் பொதுமக்கள், மாணவிகள், பெண்கள், கோயில் வழிபாட்டிற்குச் செல்பவா்களுக்கு இடையூறு ஏற்பட்டு வந்துள்ளது.

எனவே, இக்கடையை அகற்றக் கோரி அப்பகுதி பொதுமக்கள் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் தமிழக முதல்வா் ஜோசப் விஜய், கோயில்கள், நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளாா்.

இதையடுத்து ஆட்சியா் அலுவலகம் எதிரில் உள்ள டாஸ்மாக் கடையையும் அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மீண்டும் கோரிக்கை

விடுத்துள்ளனா்.

தலித் விடுதலை இயக்க மாநிலத் தலைவா் ச.கருப்பையா தலைமையில் வேங்கிக்கால் பகுதி பொதுமக்கள் மற்றும் பெண்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராமகிருஷ்ணனிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.