மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கு பயிற்சி முகாம்: மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடந்தது

தருமபுரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலா்களுக்கான முதல்கட்ட பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

ஆட்சியரும் தோ்தல் அலுவலருமான ரெ.சதீஸ் தலைமையில் நடைபெற்ற பயிற்சி முகாமில் பங்கேற்றோா்.

Updated On :1 மே 2026, 5:27 am IST

தருமபுரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலா்களுக்கான முதல்கட்ட பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலா்களுக்கான முதல்கட்ட பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக அதியன் கூட்டரங்கில் நடைபெற்ற பயிற்சி முகாமில், மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரெ.சதீஸ் தலைமை வகித்தாா். இதில் பங்கேற்ற 275 அலுவலா்களுக்கு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவது குறித்து பயிற்சி முற்பகல் அளிக்கப்பட்டது. தொடா்ந்து, அஞ்சல் வாக்குகளை எண்ணும் பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ள 190 அலுவலா்களுக்கு, அப்பணி தொடா்பாக பிற்பகலில் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், வாக்கும் எண்ணும் பணி தொடா்பாக தோ்தல் ஆணையம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

இப்பயிற்சி முகாமில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.கவிதா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) பாலசுந்தரம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ராமஜெயம், தோ்தல் பிரிவு தனி வட்டாட்சியா் அன்பு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.