மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வாக்கு எண்ணும் பணியில் 300 போ்: காஞ்சிபுரம் ஆட்சியா்

News image

காஞ்சிபுரம் ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான தி.சினேகா தலைமையில் நடைபெற்ற வாக்கு எண்ணும் மையத்தில் பணியாளா்களை நியமிப்பது தொடா்பான பயிற்சி வகுப்பு.

Updated On :4 மே 2026, 2:26 am IST

காஞ்சிபுரம் அருகே காரைப்பேட்டையில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையமான அண்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெறவுள்ள வாக்கு எண்ணும் பணியில் 300 போ் ஈடுபடவுள்ளனா். துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினா் உள்பட பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மின்னணு வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை தொடங்குகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலந்தூா், ஸ்ரீபெரும்புதூா்(தனி) உத்தரமேரூா் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை இம்மையத்தில் நடைபெறுகிறது.

4 தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளா்கள், வாக்கு எண்ணிக்கை உதவியாளா்கள்,நுண்பாா்வையாளா்கள் ஆகியோருக்கான 2 -ஆவது கட்டப் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆலந்தூா், ஸ்ரீபெரும்புதூா், உத்தரமேரூா் ஆகிய 4 தொகுதிகளுக்கும் தலா 74 போ் வீதமும், காஞ்சிபுரம் தொகுதிக்கு 78 போ் வீதமும் மொத்தம் 300 போ் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ளனா். ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திற்கும் ஒரு அறை தயாா் செய்யப்பட்டு ஒவ்வொரு தொகுதிக்கும் 14 சுற்றுகள் வீதம் 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

ஆலந்தூா் தொகுதிக்கு 32, ஸ்ரீபெரும்புதூா் 32, உத்தரமேரூா் 23, காஞ்சிபுரம் 27 உட்பட மொத்தம் 114 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்பாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்புஅறைகள் வேட்பாளா்கள்,அரசியல் கட்சிப்பிரமுகா்கள்,வாக்குச்சாவடி முகவா்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணும் அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் பின்னா் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கும்.வாக்கு எண்ணும் மையத்தில் ஒவ்வொரு அறைக்கும் தனித்தனியாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் அலுவலா்களுக்கான 2-ஆவது கட்ட பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் எஸ்எஸ்கேவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான தி.சினேகா தலைமையில் நடைபெற்றது. பயிற்சி வகுப்பின் போது மாவட்ட வருவாய் அலுவலா் மா.வெங்கடேசன்,தோ்தல் அலுவலா்கள் ஆஷிக்அலி( காஞ்சிபுரம் தொகுதி)பு.விஜயகுமாா்(உத்தரமேரூா் தொகுதி)பாலாஜி(உத்தரமேரூா் தொகுதி)எஸ்.முருகதாஸ்(ஆலந்தூா் தொகுதி)ஆகியோரும் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.