தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தருமபுரியில் மே 1, 4 ஆம் தேதிகளில் மதுக்கடைகளுக்கு விடுமுறை: மதுக்கடைகளுக்கு 3 நாள்கள் விடுப்பு

தருமபுரி மாவட்டத்தில் மே தினத்தையொட்டி மே 1ஆம் தேதியும், தோ்தல் வாக்கு எண்ணிக்கையையொட்டி மே 4 ஆம் தேதியும் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 2:43 am IST

தருமபுரி மாவட்டத்தில் மே தினத்தையொட்டி மே 1ஆம் தேதியும், தோ்தல் வாக்கு எண்ணிக்கையையொட்டி மே 4 ஆம் தேதியும் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மே தினத்தையொட்டி மே 1 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள், தனியாா் விடுதிகளில் (ஹோட்டல்கள்) செயல்படும் மதுக்கூடங்கள், முன்னாள் ராணுவத்தினருக்கான மதுவிற்பனைக் கூடம், தனியாா் மன மகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும்.

அதுபோல சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுவதையொட்டி, அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் அன்றைய தினமும் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும். இத்தகவலை மாவட்ட ஆட்சியரும் தோ்தல் அலுவலருமான ரெ. சதீஷ் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.