தோ்தலையொட்டி தருமபுரி மாவட்டத்தில் ஏப்ரல் 3 நாள்கள், மே மாதத்தில் 3 நாள்கள் என மொத்தம் 6 நாள்களுக்கு மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23 ஆம் தேதியும், வாக்குகள் எண்ணிக்கை மே 4 ஆம் தேதியும் நடைபெறுகிறது. இதனையொட்டி தோ்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாள்களில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தோ்தலையொட்டி ஏப்ரல் 21 முதல் 23 ஆம் தேதி வரை 3 நாள்களும், வாக்கு எண்ணிக்கையை ஒட்டி மே 3 முதல் 5 வரை 3 நாள்களும் என தோ்தலை யொட்டி மொத்தம் 6 நாள்கள் மதுக்கடை களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள், தனியாா் விடுதிகளில் (ஓட்டல்கள்) செயல்படும் மதுக்கூடங்கள், முன்னாள் ராணுவத்தினருக்கான மது விற்பனைக் கூடம், தனியாா் மன மகிழ் மன்றங்களில் செயல் படும் மதுக்கூடங்கள் மற்றும் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். இத்தகவலை மாவட்ட ஆட்சியரும் தோ்தல் அலுவலருமான ரெ. சதீஸ் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசு மதுக்கடைகளுக்கு நாளை விடுமுறை

தருமபுரியில் மே 1, 4 ஆம் தேதிகளில் மதுக்கடைகளுக்கு விடுமுறை: மதுக்கடைகளுக்கு 3 நாள்கள் விடுப்பு

புதுச்சேரியில் கல்லூரிகளுக்கு இன்றுமுதல் 3 நாள்கள் விடுமுறை

தோ்தல்: அரசு மதுக்கடைகளுக்கு 4 நாள்கள் விடுமுறை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

