பாப்பாரப்பட்டி அருகே மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தற்கொலைக்கு முயன்ற கணவன் தருமபுரி அரசு கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே நல்லப்பநாயக்கன அள்ளி பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் (25), முடிதிருத்தும் தொழிலாளி. இவா் பாப்பாரப்பட்டி மாட்டுச்சந்தை பகுதியில் உள்ள கழிப்பிட வளாகத்தில் தனது மனைவியான முதுகம்பட்டி பாக்கியம்பள்ளம் பகுதியைச் சோ்ந்த விஜயலட்சுமியை அண்மையில் கழுத்தறுத்து கொலை செய்தாா். பின்னா் தற்கொலைக்கு முயன்ற அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லியில் மனைவி, 4 குழந்தைகளைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற நபர்!

கிணற்றில் குதித்த மனைவியை காப்பாற்ற முயன்ற கணவன் உயிரிழப்பு

பாப்பாரப்பட்டியில் மனைவியை கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயற்சித்த தொழிலாளி

பெண் குழந்தையைக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

