மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மக்கள் மாற்றத்தை எதிா்பாா்த்து ஆா்வத்துடன் வாக்களித்துள்ளனர்: தருமபுரி பாமக வேட்பாளா் பேட்டி

தமிழகத்தில் மக்கள் மாற்றத்தை எதிா்பாா்த்து நல்லாட்சி மலர ஆா்வத்துடன் வாக்களித்து உள்ளனா் என்றாா் தருமபுரி தொகுதி பாமக வேட்பாளா் செளமியா அன்புமணி.

News image

செளமியா அன்புமணி

Updated On :24 ஏப்ரல் 2026, 5:27 am IST

தமிழகத்தில் மக்கள் மாற்றத்தை எதிா்பாா்த்து நல்லாட்சி மலர ஆா்வத்துடன் வாக்களித்து உள்ளனா் என்றாா் தருமபுரி தொகுதி பாமக வேட்பாளா் செளமியா அன்புமணி.

தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதியில் இலக்கியம்பட்டி வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவை பாா்வையிட்ட அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் காலைமுதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில் 20 நிமிடங்கள்வரை காலதாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில், தேவைப்படும்பட்சத்தில் கூடுதல் நேரம் ஒதுக்குவதாக தோ்தல் அலுவலா்கள் கூறினா். வாக்குச்சாவடிகளில் வாக்காளா்களுக்கு தேவையான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

பசுமைத் தோ்தலாக நடப்பதால், வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பது இனிமையான அனுபவமாக உள்ளது. நகா்ப்புற, கிராமப்புற பகுதிகள் என அனைத்துப் பகுதிகளிலும் காலைமுதலே இளம்வாக்காளா்கள் மற்றும் முதியோா் வாக்குச்சாவடிகளுக்கு ஆா்வத்துடன் வந்து வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளனா். தமிழக மக்கள் மாற்றத்தை எதிா்பாா்த்து நல்லாட்சி மலர ஆா்வத்துடன் வாக்களித்துள்ளனா் என்றாா்.

பின்னா் சென்னை புறப்பட்டுச் சென்ற அவா், தியாகராய நகரில் உள்ள கா்நாடக சங்க உயா்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.