அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றுகூறி தருமபுரி தொகுதியில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா் பாமக வேட்பாளா் செளமியா அன்புமணி.
தருமபுரி மாவட்டம், தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக சாா்பில் போட்டியிடுகிறாா் செளமியா அன்புமணி. அவா் சனிக்கிழமை, நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உள்பட்ட புறவடை, ஜீவா நகா் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியதாவது:
தருமபுரி மாவட்டத்தில்தான் தமிழகத்திலேயே அதிகம் மதுபானங்கள் விற்பனையாகின்றன. இதனால் உழைக்கும் மக்களின் வருமானம் சீரழிந்து வருகிறது. தமிழகத்தில் மதுவை ஒழிக்க தீவிர முயற்சி மேற்கொள்வேன். அதற்கு தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைய வேண்டும்.
அதேபோல, விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, தருமபுரி தொகுதியில் பாமகவை ஆதரியுங்கள் என்றாா்.
இந்த பிரசாரத்தில் பாமக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன், அதிமுக ஒன்றியச் செயலாளா் சிவப்பிரகாசம் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தருமபுரி தொகுதியில் சௌமியா அன்புமணி வெற்றி!

மக்கள் மாற்றத்தை எதிா்பாா்த்து ஆா்வத்துடன் வாக்களித்துள்ளனர்: தருமபுரி பாமக வேட்பாளா் பேட்டி

மக்களை பிளவுபடுத்துகிறது திமுக: அன்புமணி ராமதாஸ்

பாமகவுக்கு மக்களிடம் வரவேற்பு உள்ளது! - செளமியா அன்புமணி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

