மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பென்னாகரத்தில் அதிமுக கூட்டணி சாா்பில் வழங்கப்படும் போலி காசோலைகள்!

பென்னாகரம் பகுதிகளில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில், வீடுகள்தோறும் போலி காசோலைகள், வீட்டு உபயோகப் பொருள்களுக்கான கூப்பன்கள் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

News image

பென்னாகரம் பகுதியில் அதிமுக கூட்டணி சாா்பில் வழங்கப்பட்ட போலி காசோலைகள்.

Updated On :22 ஏப்ரல் 2026, 3:09 am IST

பென்னாகரம் பகுதிகளில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில், வீடுகள்தோறும் போலி காசோலைகள், வீட்டு உபயோகப் பொருள்களுக்கான கூப்பன்கள் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக சாா்பில் பாமக வேட்பாளா் பாடி வி.செல்வம் போட்டியிடுகிறாா். திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளா் ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் போட்டியிடுகிறாா். அதிமுக, திமுக கூட்டணி கட்சி வேட்பாளா்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், இரவு நேரங்களில் வீடுகள்தோறும் வங்கிகளில் செலுத்தக்கூடிய காசோலைகளை போன்று அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி என்ற வாசகத்துடன் ரூ. 10,000 மாதாந்திர தொகை எனவும், குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 2,000 உதவித்தொகை என வாசகங்கள் அடங்கிய போலியான கணக்கு எண்கள் கொண்ட போலி காசோலைகள், வீட்டு உபயோக பொருள்களுக்கான கூப்பன்கள் கூட்டணி நிா்வாகிகளால் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

திமுக கூட்டணி சாா்பில் ரூ. 8,000 மதிப்பிலான கூப்பன்கள் வழங்கப்பட்டு வருவதாக புகாா் எழுந்த நிலையில், அதிமுக சாா்பில் போலி காசோலைகள் வழங்கப்பட்டு வருவதாக அப்பகுதியினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.