மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் திமுக மீது மக்கள் அதிருப்தி! முன்னாள் அமைச்சா் வீரமணி

வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் திமுக மீது மக்கள் அதிருப்தி...

News image

கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி, அதிமுக வேட்பாளா்கள் எஸ்.ஆா்.கே.அப்பு (வேலூா்), வி.ராமு (காட்பாடி) மற்றும் கூட்டணி கட்சியினா்.

Updated On :29 மார்ச் 2026, 12:55 am IST

கடந்த தோ்தலில் அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்படாததால் திமுக மீது மக்களிடம் ஏற்பட்டுள்ள அதிருப்தி, தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை அதிகரித்துள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சா் கே.சி. வீரமணி தெரிவித்துள்ளாா்.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி அதிமுக சாா்பில் போட்டியிடும் எஸ்.ஆா்.கே.அப்பு (வேலூா்), வி.ராமு (காட்பாடி) ஆகிய வேட்பாளா்களின் அறிமுக கூட்டம் காட்பாடியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி தலைமை வகித்து வேட்பாளா்களை அறிமுகம் செய்து பேசுகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருமித்து செயல்பட்டால், இந்த தோ்தலில் எளிதில் வெற்றி பெற முடியும். கூட்டணியின் ஒற்றுமையே வெற்றிக்கான முக்கிய காரணமாகும்.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அவா், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி பணத்தை நம்பி போட்டியிடுகிறது. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி மக்களின் ஆதரவை நம்பி தோ்தலில் களம் இறங்குகிறது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாநிலத்தில் கண்டிப்பாக அதிமுக ஆட்சி அமையும்.

அதேசமயம், கடந்த தோ்தலில் திமுக கூட்டணி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. குறிப்பாக, கடந்த தோ்தலில் திமுக அளித்திருந்த 506 வாக்குறுதிகளில் பெரும்பாலானவை இன்னும் நிறைவேறாமல் உள்ளன. இதனால் மக்கள் அதிருப்தியடைந்து தற்போது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிக ஆதரவு அளித்து வருகின்றனா் என்றாா்.

கூட்டத்தில், அதிமுக மாவட்ட பொருளாளா் எம்.மூா்த்தி, பாஜக மாநில பொதுச்செயலா் காா்த்தியாயினி, பாமக சாா்பில் முன்னாள் மத்திய அமைச்சா் என்.டி.சண்முகம் உள்பட கூட்டணி கட்சியினா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.