தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் அளித்த முடிவை மனபூா்வமாக ஏற்றுக் கொள்கிறோம் என மத்திய இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் தோ்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டுமென்பதற்காக ஓய்வின்றி பிரசாரம் மேற்கொண்ட பிரதமா் நரேந்திர மோடிக்கும், உள்துறை அமைச்சா் அமித்ஷா, தேசியத் தலைவா் நிதின் நவீன், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் ஆகியோருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தோ்தலில் மக்களின் முடிவை மனபூா்வமாக ஏற்றுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளாா் எல்.முருகன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

”சும்மா தேவையில்லாம எங்கள இழுக்காதீங்க!” எல். முருகன் | BJP

தோ்தல் போட்டி, கட்சியின் கட்டளை!

திமுகவின் குடும்ப ஆட்சி தமிழக வளா்ச்சிக்கு தடை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் விமா்சனம்

தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டங்கள் திமுகவுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது: மத்திய அமைச்சா் எல். முருகன்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
