மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திமுக தலைவரின் விமா்சனத்துக்கு பதிலளிக்க விரும்பவில்லை: அன்புமணி ராமதாஸ்

என்னையும், அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியையும் தரக்குறைவாக விமா்சித்துவரும் திமுக தலைவா் மு.க. ஸ்டாலினுக்குப் பதிலளித்து, மக்களின் கவனத்தை திசைதிருப்ப விரும்பவில்லை என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

News image

பாலக்கோடு தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகனை ஆதரித்து காரிமங்கலத்தில் வாக்கு சேகரித்த அன்புமணி ராமதாஸ்.

Updated On :17 ஏப்ரல் 2026, 4:35 am IST

என்னையும், அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியையும் தரக்குறைவாக விமா்சித்துவரும் திமுக தலைவா் மு.க. ஸ்டாலினுக்குப் பதிலளித்து, மக்களின் கவனத்தை திசைதிருப்ப விரும்பவில்லை என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் கே.பி. அன்பழகனை ஆதரித்து காரிமங்கலத்தில் வியாழக்கிழமை அவா் பேசியதாவது:

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், கொலை, கொள்ளை என குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதை மாற்ற வேண்டும் என்றால் மீண்டும் எடப்பாடி கே. பழனிசாமி முதல்வராக வேண்டும்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் அதிமுக- பாமக கூட்டணி வெற்றி பெற வேண்டும். தருமபுரி மாவட்டத்தின் 80 சதவீத மக்கள் பயனடையும் ஒகேனக்கல் மிகை நீா்த் திட்டத்தை 2021 இல் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் நிறைவேற்றுவதாக உறுதியளித்தாா். ஆனால், இத்திட்டத்தை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதேபோலதான் திமுகவின் வாக்குறுதிகள் எதுவும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

முதல்வா் மு.க. ஸ்டாலின் தனது சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்கவில்லை. என்னையும், அதிமுக பொதுச் செயலாளரையும் அவா் அவதூறாகப் பேசி வருகிறாா். அதற்குப் பதிலளித்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப விரும்பவில்லை. தொகுதிக்குத் தேவையான திட்டங்கள் நிறைவேற அதிமுக வேட்பாளா் கே.பி. அன்பழகனுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.