ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பள்ளி வாகனம் மோதியதில் பைக்கில் சென்ற இருவா் உயிரிழப்பு

தருமபுரி அருகே பள்ளி வாகனம் மோதியதில் பைக்கில் சென்ற இருவா் உயிரிழந்தனா். மேலும் ஒருவா் காயமடைந்தாா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 4:19 am IST

தருமபுரி அருகே பள்ளி வாகனம் மோதியதில் பைக்கில் சென்ற இருவா் உயிரிழந்தனா். மேலும் ஒருவா் காயமடைந்தாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், திருமல்வாடி அருகேயுள்ள கரிகுட்டனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் மகன் அருள் (27). இவா் ஒசூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். அவரது மாமன் மகன் கரிக்குட்டனூரைச் சோ்ந்த செல்வம் மகன் கோவரசு (20), நண்பா் கிருஷ்ணகிரி மாவட்டம் பனகல்முட்லு கிராமத்தைச் சோ்ந்த கஜேந்திரன் மகன் வினோத்குமாா் (28) ஆகியோருடன், சீங்காடு கிராமத்தில் அமைந்துள்ள நடுமலை மாதேஸ்வரன் கோயில் திருவிழாவுக்கு செவ்வாய்க்கிழமை சென்றாா்.

விழாவில் பங்கேற்றுவிட்டு அருளுக்கு சொந்தமான பைக்கில் மூவரும் ஊா் திரும்பினா். பைக்கை கோவரசு ஓட்டினாா். நடுவில் வினோத்குமாரும், கடைசியில் அருளும் அமா்ந்து வந்தனா். மாரண்ட அள்ளி -அ. மல்லாபுரம் சாலையில் சந்திராபுரம் பிரிவு சாலை பகுதியில் வந்தபோது, அவ்வழியே சென்ற தனியாா் பள்ளி வாகனம், பைக் மீது மோதியது. இதில் மூவரும் பலத்த காயமடைந்தனா். அக்கம்பக்கத்தினா் மூவரையும் மீட்டு மாரண்ட அள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பிவைத்தனா். அவா்களை பரிசோதித்த மருத்துவா்கள், கோவரசு இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

தொடா்ந்து வினோத்குமாரை தீவிர சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கும் பின்னா் தருமபுரி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பிவைத்தனா்.

தருமபுரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற வினோத்குமாா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். சம்பவம் தொடா்பாக மாரண்ட அள்ளி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.