தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றாததற்கு திமுக அரசின் மெத்தனப் போக்குதான் காரணம்: அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகன்

பாலக்கோடு தொகுதியில் நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றாததற்கு திமுக அரசின் மெத்தனப் போக்குதான் காரணம் என அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.

News image

காரிமங்கலம் அருகே வாக்கு சேகரித்து பேசிய அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகன்.

Updated On :9 ஏப்ரல் 2026, 4:13 am IST

பாலக்கோடு தொகுதியில் நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றாததற்கு திமுக அரசின் மெத்தனப் போக்குதான் காரணம் என அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.

பாலக்கோடு தொகுதிக்கு உள்பட்ட முக்குளம், பொம்மஅள்ளி, தும்பலஅள்ளி, புலிக்கல், கேத்தனஅள்ளி, எலுமிச்சனஅள்ளி, அனுமந்தபுரம், பல்லேனஅள்ளி, எர்ரசீகலஅள்ளி, அண்ணாமலை அள்ளி ஆகிய ஊராட்சிகளில் அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகன் வாக்கு சேகரித்து பேசியதாவது:

பாலக்கோடு தொகுதியில் நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்ற அதிமுக ஆட்சியில் அரசாணை பிறப்பித்து, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் பயணிகளும் தொடங்கப்பட்டன. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு அத்திட்டங்கள் மீது அக்கரை செலுத்தாமல், நிலம் கையகப்படுத்தும் பணிகளை முடிக்காமல் மெத்தனமாக இருந்ததே அத்திட்டங்கள் நிறைவேற்றாததற்கு காரணம். ஐந்த ஆண்டுகளில் சுமாா் 25

சதவீத பணிகள் கூட மேற்கொள்ளப்படவில்லை. எனவே, பொதுமக்கள் நிலுவையிலுள்ள திட்டங்கள் நிறைவேற அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா். இந்த பிரசாரத்தின்போது அதிமுக நிா்வாகிகள், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.