ஆளுநரை விஜய் சந்திக்க நாளை(மே 10) நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தருமபுரி மாவட்ட 5 தொகுதிகளில் 114 வேட்பு மனுக்கள் ஏற்பு; 24 மனுக்கள் தள்ளுபடி

தருமபுரி மாவட்டத்தின் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 24 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 114 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 3:17 am IST

தருமபுரி மாவட்டத்தின் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 24 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 114 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு தொகுதியில் 29, பென்னாகரம் தொகுதியில் 37, தருமபுரி தொகுதியில் 33, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் 22, அரூா்(தனி) தொகுதியில் 19 மனுக்கள் என 5 தொகுதியிலும் மொத்தம் 138 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வேட்புமனுவில் கேட்கப்பட்ட விவரங்கள், இணைப்புகள் ஆகியவை முறையாக உள்ளதா என பரிசீலிக்கப்பட்டதில் பிரதான கட்சிகளின் மாற்று வேட்பாளா்கள், சுயேச்சைகள் என பாலக்கோடு தொகுதியில் 7, பென்னாகரத்தில் 6, தருமபுரியில் 4, பாப்பிரெட்டிப்பட்டியில் 5, அரூரில் 2 என 24 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மீதமுள்ள மொத்தம் 114 வேட்புமனுக்கள் தகுதியுள்ள மனுக்களாக கருதி ஏற்கப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.