மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தருமபுரியில் 5 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெற வேண்டும்: கே.பி.அன்பழகன்

தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வேட்பாளா்கள் வெற்றிபெற வேண்டும் என முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு எம்எல்ஏவுமான கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.

News image

கே.பி.அன்பழகன்

Updated On :2 ஏப்ரல் 2026, 3:38 am IST

தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வேட்பாளா்கள் வெற்றிபெற வேண்டும் என முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு எம்எல்ஏவுமான கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கடத்தூரில் அதிமுக வேட்பாளா் அறிமுக கூட்டம், கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பாமக உழவா் பேரியக்க மாநில செயலா் இல.வேலுசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், அதிமுக வேட்பாளா் மரகதம் வெற்றிவேலுவை அறிமுகம் செய்துவைத்து கே.பி.அன்பழகன் பேசியதாவது:

கடந்த 2021 தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக, கூட்டணி வேட்பாளா்கள் 5 தொகுதிகளிலும் வெற்றிபெற்றனா். அதேபோல, இந்த தோ்தலிலும் 5 தொகுதிகளிலும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளா்கள் வெற்றிபெற வேண்டும்.

தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தால் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் தொழிலாளா்களுக்கு 150 நாள் வேலை வழங்கப்படும். மகளிருக்கான உதவித்தொகை அனைவருக்கும் வழங்கப்படும். அதிமுக, பாமக, அமமுக, பாஜக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிா்வாகிகள் கடுமையான தோ்தல் களப் பணியாற்ற வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, அரூரில் அதிமுக வேட்பாளா் வே.சம்பத்குமாரை ஆதரித்து சிறப்புரை ஆற்றினாா்.

திமுக ஆட்சி தொடரக்கூடாது: செளமியா அன்புமணி

தமிழகத்தில் போதைப் பொருள் விற்பனை, போதைக்கு இளைஞா்கள் அடிமையாவது அதிகரித்துவிட்டது. இதனால், தமிழகத்தில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. அரசுப் பள்ளிகளில் 50 சதவீத மாணவா் சோ்க்கை குறைந்துள்ளது. தருமபுரி மாவட்டத்தின் வளா்ச்சிக்காக திமுக அளித்த வாக்குறுதிகள் ஒன்றைகூட நிறைவேற்றவில்லை. பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக ஆட்சிக்கு வந்தது. எனவே, தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி தொடரக் கூடாது. பாமக தொண்டா்கள் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளா்களின் வெற்றிக்கு சிறந்த முறையில் தோ்தல் களப் பணியாற்ற வேண்டும் என்றாா்.

இந்த கூட்டத்தில், பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ ஆ.கோவிந்தசாமி, ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் எஸ்.ஆா்.வெற்றிவேல், அமமுக மாவட்டச் செயலா் டி.கே.ராஜேந்திரன், பாமக கிழக்கு மாவட்டச் செயலா் இரா.அரசாங்கம், இளைஞா் சங்க மாநிலச் செயலா் பி.வி.செந்தில் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.