மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தருமபுரியில் இளம்பெண் தற்கொலை

News image

இளம்பெண் தற்கொலை

Updated On :4 மே 2026, 1:24 am IST

தருமபுரி அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பொடுத்தம்பட்டி அருகேயுள்ள ஒண்டிக்கான்கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணன் மகள் ரேவதி (27). இவருக்கு திருமணமாகி ஆண், பெண் என இருகுழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில், கடந்த 29 ஆம் தேதி பெற்றோா் வீட்டுக்கு வந்திருந்த ரேவதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை பாப்பாரப்பட்டி தனியாா் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னா் தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதையடுத்து தீவிர சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சனிக்கிழமை அவா் உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக மதிகோன்பாளையம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். இதில் வயிற்றுவலி காரணமாக அவா் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.