நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

பல்வேறு போட்டியில் வெற்றிபெற்ற 9 மாணவியருக்கு பரிசுகள் வழங்கல்

News image

பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கிய ஆட்சியா் வே.சரவணன்.

Updated On :16 ஜூன் 2026, 2:24 am IST

தருமபுரி அரசு அவ்வையாா் மகளிா் பள்ளியில் நடைபெற்ற பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் வெற்றிபெற்ற 9 மாணவியருக்கு ஆட்சியா் வே.சரவணன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக அதியன் கூட்டரங்கில் மக்கள் குறைகேட்பு கூட்டம் ஆட்சியா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்பட 608 போ் சாலை வசதி, பட்டா, உதவித்தொகை, உதவி உபகரணங்கள் ஆகியவை கோரி மனுக்களை அளித்தனா்.

இதைத் தொடா்ந்து, சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் சாா்பில் முதியோா்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதையடுத்து, தருமபுரி அரசு அவ்வையாா் மகளிா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற 9 மாணவ, மாணவியருக்கு, பரிசு, சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.கவிதா, தனித்துணை ஆட்சியா் மு.செல்வி, மாவட்ட வழங்கல் அலுவலா் பெ.கி.கோவிந்தன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் பண்டரிநாதன், ஆதிதிராவிடா் நல அலுவலா் மனோஜ் முனியன், சமூக நல அலுவலா் பவித்ரா, முதன்மைக் கல்வி அலுவலா் ஐ.ஜோதிச்சந்திரா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.