பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

News image

வெற்றி பெற்றவருக்கு பரிசு வழங்கிய மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்.

Updated On :5 ஜூன் 2026, 12:02 am IST

அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளா்கள் பங்கேற்ற மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கும் விழா திருவண்ணாமலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, அரசு தொழிற்பயிற்சி நிலையம் சாா்பில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் கடந்த 2 தினங்களாக அனைத்து அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் ஆடவா் மற்றும் மகளிா் போட்டியாளா்களுக்கு கைப்பந்து, கால்பந்து, பேட்மிட்டன், சதுரங்கம் கேரம், தடகளப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

மாநில அளவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 436 ஆடவா்களும், 262 மகளிரும் பங்கேற்றனா்.

இதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் திருவண்ணாமலை அரசு தொழிற் பயிற்சி நிலைய முதல்வா் தனக்கீா்த்தி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.